Wednesday, December 10, 2014

கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும்



முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட

உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக்

கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது.

என்ன காரணம்?

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்

மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர

்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக

உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின்

எவ்வளவு பெரிய அறிவியல்

ஒளிந்திருக்கிறது என இப்போதுதான்

தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம்,

வெள்ளி செம்பு(அ)

ஐம்பொன்னால் செய்யப்பட்ட

கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்

கொட்டப்படும் தானியங்களும்,

உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும்

சக்தியை கலசங்களுக்குக்

கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம்,

மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக்

கொட்டினார்கள். குறிப்பாக

வரகு தானியத்தை அதிகமாகக்

கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப்

பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக

ஆற்றலைபெற்றிருப்பது என இப்போதைய

அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை,

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற

பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய

தானியங்கள் நீக்கப்பட்டு புதிய

தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும்

கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால்,

அந்த தானியங்களுக்குப்

பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த

சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல்

இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?

ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும்

இல்லை. இன்றைக்குப் பெய்வதைப்

போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள்

பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில்

மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப்

பயிர் செய்வது? இவ்வளவு உயரமான

கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை.

இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில்

அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்'

ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும்

என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது.

அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம்

ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர்

விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர்

இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல்

காக்கப்படுவார்கள். அதாவது சுமார்

75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள்

காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள்

உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர

மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட

அதிகமான பணிகளை சத்தமில்லாமல்

செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

தர்ப்பணம், சிராத்தம் தகவல்கள்


1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.



2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில்தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.



3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிராத்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.



4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும்ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.



5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமானபூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமானபூஜைகளைச் செய்ய வேண்டும்.



6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும்என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.



7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்ததண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.



8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்ததண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்துஅவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள்என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.



9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது.அகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.



10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்யவேண்டும்.



11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்குமகிழ்ச்சியைக் கொடுக்கும்.



12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.



13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.



14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12

Wednesday, September 10, 2014

தினம் ஒரு திருமந்திரம் 09-09-2014


குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித்து ஓரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் அற்றதோர் கோவே.

பொருள் : 
எனது குரு மண்டலத்தில் விளங்கும் நந்தி குருவே சிவம் என உபதேசித்தான். குரு மண்டலமே சிவனுமாய் உயிருக்குத் தலைவனுமாய் உள்ளது. குருமண்டலமே வாக்கு உணர்வைக் கடந்து விளங்கம் அரசனாகும். இத்தகைய பெருமையுடைய குருமண்டலத்தில் சிவம் உள்ளிருந்து விளங்குவதைச் சாமானியர் அறியாதவராக உள்ளார்

Monday, August 11, 2014

தினம் ஒரு திருமந்திரம் 11-08-2014



அரன்நெறி யாவது அறிந்தேனும் நானும்
சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந்து ஏறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

பொருள் : அரனை அடைவதற்குரிய வழியாவதை அறிந்தேன். ஆகிய நானும் வேறு சில நெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்து வன்மை மிக்க நெறியில் எண்ணமாகிய கடலைக் கடந்து ஏறுவதற்கு மேன்மையான நெறியாக நின்றது ஒப்பற்ற சுடரேயாம்.

Tuesday, August 5, 2014

தினம் ஒரு திருமந்திரம் 05-08-2014



வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

பொருள் :
வேதாந்தமாவது சுத்த சைவ சித்தாந்தமாம். இந்நெறி நிற்போரே நாதவடிவமாகிய சிவத்தைத் தரிசித்த சலனம் அற்றவராவர். தத்துவ முடிவை ஞானமயமாகப் பண்படுத்த நாதமுடிவில் நிறைவுற்று விளங்கும் சிவம் அறியப்படு பொருளாவர். விளக்கம்; சுத்த சைவ சித்தாந்தமே வேதங்களின் முடிவு . (பூதாந்தம் - பூதங்களின் முடிவு போதாந்தம் - ஞானமுடிவு . புனம் செய்ய - ஐம்புலக் காட்டினைப் பண்படுத்த.)

Wednesday, March 12, 2014

அம்மா உனக்கு நமஸ்காரம்!

ஆதிசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது. தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன் துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார். இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை. தாயின் அனுமதியில்லாமல் துறவியாகவோ ஆதிசங்கரருக்கு சம்மதமில்லை.

ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை ஒரு பற்றிக் கொண்டது. ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார். “அம்மா என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் சன்னியாசி ஆக நீ அனுமதி தந்தாயானால் அது என்னை விட்டு விடும்”.

ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒத்துக் கொண்டார். ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார். முதலை அவர் காலை விட்டு விட்டது. (அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)

கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை. வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹி” என்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும். முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார்.

உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால் துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார். ‘உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்”

ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார். ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள். சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார்.

அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர் தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்” மிகவும் நெகிழ்ச்சியானது. அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே. ஒரு ஜகத்குரு ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப் பாடிய மாத்ரு பஞ்சகம் இது தான் -

“அம்மா, என்னைக் கருவில் தாங்கி நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலம் மூத்திரம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அன்று முதல் இன்று வரை நீ எனக்கு செய்ததற்கு கைம்மாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே!

நான் குருகுலத்தில் இருந்த ஒரு சமயம் நான் துறவு பூண்டதாக நீ கனவு கண்டாய். உடனே நீ அங்கு ஓடி வந்து கதறினாய். அதைக் கண்டு எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க உன் கனவைச் சொல்லிக் கதற அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறியதே! அத்தகைய உனது காலில் வீழ்ந்து நான் இன்று கதறுகிறேன்.

எல்லா சக்திகளும் அற்றுப் போன கடைசி காலத்தில் கொஞ்சம் தண்ணீர் தந்தால் ஆறுதல் உண்டாகும். அந்தப் பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பு ஒவ்வொரு முறையும் திதியில் சிரார்த்தம் செய்யும் பாக்கியமும் இல்லாத சன்னியாசியாக நான் இருக்கிறேனே.

அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் முத்தே, மணியே, கண்ணே, ராஜாவே, குழந்தாய் நீ வெகு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்திய வாய்க்கு வாய்க்கரிசி போடுகிறேனே.

தாயே பிரசவ வேதனை தாளாமல் அம்மா, அப்பா, சிவா, கிருஷ்ணா, கோவிந்தா, முகுந்தா என்றெல்லாம் கதறிய ஒரு கதறலுக்கு என்னால் பதில் கூற முடியுமா? அம்மா உனக்கு நமஸ்காரம்.”

காரடையான் நோம்பு


இந்த நோம்பு மாசியும் -பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடபடுகின்றது.

காரடையான் நோம்பு எதற்கு கொண்டாடுகின்றோம் என்பதை அறிவோமா?

காதல் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,ஆனால் அது மிகப்புனிதமான ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும் இருந்தது அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி ,,, ஒருநாள் தன் தோழிகளுடன் வனத்திற்குச் சென்றாள்.

அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன் அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான்.

அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள், மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன் விருப்பத்தைத்தெரிவித்தாள்,அந்தச்சம்யம் "நாராயணா
நாராயணா " என்றபடியே நாரதர் நுழைந்து பின் விவரம் அறிந்து அந்த வாலிபன் "சத்தியவான்" எனவும் அவன் இன்னும் ஒருவருடத்தில் மரணம் அடைவான் என்றும் குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி.

இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச் சத்த்ய்வானுக்குத் திருமணம் செய்துக்கொடுத்தார்
அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,, மாளிகைவிட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த விரத்ததை மேற்கொண்டாள். அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி அதில் காராமணியும் சேர்த்து அடைப்போல் தட்டி வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் .

அந்த நாளும் வந்தது சத்தியவான் விற்கு வெட்டும் போது பாம்பின் ரூபமாக யமன் வந்தான் , அவனைக்கொட்டினான் தள்ளாடியபடியே அவன் கீழே சாய சாவித்திரி அவனைத்தாங்கிக்பிடித்தாள்.

கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக்கொடுக்கும்படி வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள் அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது
'சாவித்திரி நான் என் கடமையைத்தான் செய்கிறேன் அவன் உயிரைத்தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் " என்றான்

" யமராஜனே என் வம்சம் வாழையடியாகத்தழைத்து வளர வேண்டும் "

" சரி அப்படியே ஆகட்டும் தந்தோம் " என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான்

" உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித்தழைத்து ஒங்க முடியும் "என்று பதிலுக்கு சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின்
உயிரைத்திரும்பிக்கொடுத்தான்

சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும் வென்று தன் புருஷனை மீள வைத்தன ,

இந்தக்கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் இது போல ஒன்றை வடநாட்டில் கரவாசௌத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள் காலையிலிருந்து தண்ணீர் கூடக்குடிக்காமல்
இரவில் சந்திரனைப்பார்த்தப்பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறார்கள் ,என் மருமகள் வடநாட்டில் இருந்து பழக்கப்பட்டதால் அந்த நோம்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும்
பட்டினி கிடப்பான் , பெண்களுக்குத்தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே "என்று சொல்லும்போது இது போல் ஆண்களுக்கும் எதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று
தோன்றுகிறது ,ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப்பின் வரும் என்ற ஞாபகம்.

நம் நோன்பு மாசிமாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் "மாசிக்கயிறு பாசிப்படியும்" என்று சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம்.

அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள் “மாசிக்கயிறு பாசி படியும்” என்று, பங்குனி முதல்நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேடமானதாகக் கருதப்படுகிறது.

இந்த நோம்பு செய்யும் போது கீழ் வரும் ஸ்லோகத்தை சொல்லவும்.

'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் .அதாவது " உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் "

( 'நூற்றேன்' என்பதற்கு 'தருவேன்' என்று சொல்வதும் உண்டு)

என்று சொல்லியபடியே சரடை அணிந்துக்கொள்வார்கள் , 

எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு உறவுகள்
பின்னப்ப்டுகின்றன ,,,,,,, இந்தக்கால்த்தில் தாலிக்கு இத்தனை மதிப்பு
கொடுக்கபடுகிறதா ? அல்லது இருமனம் ஒருமனம் ஆனாலே போதும் என்று நினைக்கப்ப்டுகிறதா ? விஜய் டிவியில் "நீயா நானா "வில் இதுவும் அலசப்பட்டுவிட்டது.

மிகவும் அழகான விரதம் இது. கடைக்கண் பார்வையில் காதலும். உள்ளத்தில் பக்தியும், புத்தியில் சிரத்தையும் கூடி செய்யும் விரதம். அன்று மட்டுமல்லாது, வாழ்க்கை முழுவதும் இந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லலாம் - ஆண்களும் தான்.

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ப்ரதே
மங்களார்த்தம் ம்ங்களேசி மாங்கல்யம் தேஹி மே ஸதா!!


Monday, March 10, 2014

தினம் ஒரு திருமந்திரம் 10-03-2014

காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே.

பொருள்

ஆதிமந்திரம் அஞ்செழுத்து என்னும் உண்மையால் அக்காரண மந்திரத்தை இடையறாது ஓதும் மெய்யடியார்களது நெஞ்சத் தாமரையின்கண் உட்கொளல், நிறுத்தல், விடுதல் என்னும் உயிர்ப்புப் பயிற்சிக்குத் துணையாக திருவருள் அம்மை எழுந்தருள்வள். அங்ஙனம் எழுந்தருளும்போது நாரணி என்னும் பெயர் பெறுவள் சிவபெருமான் அருளிச் செய்த மறைநூலின் முதலும் முடிவுமாய் விளங்குவதும் திருவருள்அம்மையேயாம். (பூரகம் - மூச்சை உட்கொளல்; கும்பதும் - நிறுத்தல்; இரேசகம் - வெளிவிடுதல் நந்தி - சிவபெருமான்)

Thursday, February 27, 2014

மின்சாரம் பற்றி அகத்தியர் கண்டுபிடிப்பு

குட்டை உருவம் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் !!!!!!

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

“இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்வது சரியல்ல!


பரீட்சையில் நிறைய மார்க் வாங்கினால்தான் மேலே படிக்க முடியும். இல்லையென்றால்வெறும் போஸ்ட் கிராஜூவேட் படிப்புடன் நின்றுவிட வேண்டியதுதான்.
நான் எவ்வளவு முயன்றும் எண்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை. தொண்ணூறாவது வேணும் ந்யூமராலஜி பிரகாரம் பெயரை மாற்றி வைத்துக்
கொண்டால் மார்க் நிறைய கிடைக்கும் என்றார்கள். எண் கணித ஜோதிடர் ஒருவரிடம் போனேன். நாராயணசாமி (Narayanaswami) என்ற பெயரை ‘Narain’ என்று வைத்துக்கொள்ளச்சொல்கிறார். பெரியவா உத்திரவு கொடுத்தால்
‘நாரெய்ன்’ என்று வைத்துக்கொள்வேன்.
பெரியவா சந்நிதியில் பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்த போது தன் விண்ணப்பத்தைச் சொல்லி முடித்தான், கல்லூரி மாணவன் ஒருவன்.
இதை சாக்காக வைத்துக்கொண்டு பெரியவாள் ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார்கள்!
“நாற்பது சமஸ்காரங்களில் ஒன்று நாமகரணம். பலபேர்கள் முன்னிலையில், வேத மந்திரங்களைக் கூறி நிகழ்த்தப்படும் சடங்கு, நாமகரணம் செய்வதற்கு (பெயர் வைப்பதற்கு)த்தான் வேத மந்திரங்கள் இருக்கின்றன.
நாமவிகரணத்துக்கு (பெயரை சிதைத்து, மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.
ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு ‘நம்பி,பிம்பி’ என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; ‘கண்ணன் பெயரை
வையுங்கள்’ என்று ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்.
நாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடாவிட்டாலும் , நாராயணா, நாராயணா என்று அழைப்பார்கள்.சுலபமா புண்ணியம் கிடைச்சிடும்.
ந்யூமராலஜி என்று சமீப காலத்தில் பிரசித்தமாக இருக்கு. ஒவ்வோர் இங்கிலீஷ் எழுத்துக்கும் நம்பர் கொடுத்து, அதைக் கூட்டி ,’நல்லது கெட்டது’ என்கிறார்கள். இது, சுதேசிச் சரக்கு இல்லை என்பது தெரிகிறது. எண் கணிதப்படி பெயர் மாற்றம் செய்து கொண்டவர்களில் பலர், நல்ல பலன் கிடைத்தது என்கிறார்கள்….
அது போகட்டும், ந்யூமராலஜியைப் பற்றி இப்போ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.
பையனுக்கு நிறைய மார்க் வாங்கணும் என்று கவலை, அதனால் பெயரைக் கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டால், ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான். அந்த ஆசை சரிதான்; வழி அவ்வளவு சரியில்லையோ? என்று சிந்திக்க வைக்கிறது.
கல்வி அறிவை சரஸ்வதி கடாக்ஷம் என்பார்கள். சரஸ்வதியின் அருள் இருந்தால் படிப்பு வரும்; மார்க் வரும். அதற்கு என்ன செய்யணும்.
சரஸ்வதி ஸ்தோத்திரம் இருக்கு. சௌந்தர்யலஹரியிலே மூணு சுலோகம்,
ஸாரஸ்வத ப்ரயோகம்,மேதா ஸூக்தம் என்று வேத மந்திரமே இருக்கு.
குமரகுருபரரின் சகலகலாவல்லிமால, கம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்திரம் எல்லாம் பாராயணம் செய்யலாம்.
ஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம். அவர்தான் சகல கலைகளுக்கும்,
ட்ரெஷர் ஹௌஸ் என்பார்கள். ஹயக்ரீவ ஸ்தோத்திரம், மந்திரம் இருக்கு.
மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இருக்கு.
இவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர சம்மதமாகப் படவில்லை.”
இத்தனை விஷயங்களையும் பொதுவாகச்சொல்லிவிட்டு, பின்னர் மாணவனைப் பார்த்தார்கள் பெரியவாள்.
அவன் கண்கள் கெஞ்சிக் கொண்டிருந்தன.
தொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச்சொன்னபோது, மாணவன் பெயரைக்
கேட்கச் சொன்னார்கள் பெரியவாள்.
“நாராயணஸ்வாமி” என்று கம்பீரமாகப் பதில் வந்தது!

வீட்டில் ஐஸ்வர்யமும், தனமும் என்றும் பெருக

வீட்டில் ஐஸ்வர்யமும், தனமும் என்றும் பெருக - சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வோம்.....!

1. அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும்.

2. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது, தன்முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையாவது முதலில் பார்த்துவிட வேண்டும்.

3. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.

4. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

5. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால் பாயாசம், கற்கண்டு கனி வகை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.

6. வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக் கொடுக்கலாம்.

7. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

8. வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

9. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.

10. வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

11. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.

12. குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது.

13. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது.

14. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது

15. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.

16. உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.

Wednesday, February 12, 2014

அகங்காரம் வெந்து சாம்பலாகும்


ஒரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது.

நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நம் மனமே மூல காரணமாக இருக்கிறது, ஒரு மீன் வியாபாரி இருந்தான், வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது பெரும்மழை பிடித்துக் கொண்டதால் வழியில் இருந்த அவன் பூக்கார நண்பன் வீட்டில் இரவு தங்கினான், அன்று இரவு முழுக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை ஏன்? மீன் நாற்றத்திலேயே உறங்கிப்பழக்கப்பட்டவனுக்கு பூவாசம் பெரும் தொல்லையாக இருந்தது,அதேபோன்றுதான் நம் மனம் முடைநாற்றம் வீசும் எண்ணங்களுக்குஉள்ளேயே முடங்கிக் கிடப்பதனால் பக்திப் படியேறி ஞானரதத்தில் பயணம் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி தரங்கெட்டுக் கிடக்கிறோம்,

இல்லையே? நான் அப்படி இல்லையே? நான் தினசரி பூஜை செய்கிறேன், தியானம் செய்கிறேன் அனைத்து விரதங்களையும் தவறாமல் கடைபிடிக்கிறேன், ஆனாலும் ஞானரதப் பயணம் எனக்குக் கிடைக்கவில்லையே? துன்பத்திலே அல்லவா துவண்டு கிடக்கிறேன்? தோல்வியில்அல்லவா துடிதுடித்து சாகின்றேன்? என்று சிலர் முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது,

அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன், உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் உங்கள் விரதமும். பூஜையும்பகவானை நோக்கியா? பகட்டான வாழ்வை நோக்கியா? நிச்சயமாக நாம் வெளிப் பொருள் வேண்டியே வேள்விகள் செய்கிறோம், ஒரு விவசாயி இரவு முழுவதும் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சினான்,விடிந்தபின் தோட்டத்தைப் பார்த்த விவசாயி பதைத்து போனான்,காரணம் இரவு முழுவதும் கஷ்டப்பட்டு இரைத்து பாய்ச்சிய தண்ணீர் தோட்டத்திற்குள் துளிகூட இல்லை, எலி ஒன்று தோண்டிய வளையால் வாய்க்கால் வழி உடைந்து வெற்று நிலத்திற்கு நீரெல்லாம் போய்விட்டது, புகழ். வெற்றி. பொருள் ஆகியவற்றில் கருத்தூன்றி பக்தன் செய்யும் அனைத்து விதமான ஈஸ்வர ஆராதனை ஒரு பலனும் இல்லாமல் எலி வளைத் தண்ணீராகத் தான் முடியும்,



இப்படிப்பட்ட பூஜையும்.பிரார்த்தனையும் ஆயுள் முழுக்க செய்தாலும் புறப்பட்ட இடத்திலேயே நகரவே நகராமல் நடந்து கொண்டிருப்போம், குழந்தை தாயிடம் ஆடை கேட்கிறதா? அணிகலன்கள் கேட்கிறதா? ஆனாலும் தாய் அவைகளை குழந்தைக்குத் தராமலா இருக்கிறாள், தாய்க்குத் தெரியும் தன் குழந்தைக்கு எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று, நாம் விவரம் புரியாமல் வெய்யில் காலத்தில் கம்பளியும். பனிக்காலத்தில்ஜஸ்கிரிமும் கேட்டால் எந்தத் தாய்தான் தருவாள்? தாயை விட சாலப்பரிவு உடையவன் இறைவன், அவனிடம் உன்னை முழுவதுமாகஒப்படைத்து விடு, உன் குறைகளை நிறையாக்குவது அவன் வேலை,அவனை மட்டுமே அடைய அழுவதும். தொழுவதும் தான் உன்வேலை, அவனை நீ அடைய வேண்டுமென்றால் உன்னை அவன் முதலில் அடையவேண்டும், அதற்கு நீ ஆமைபோல் ஐம்புலன் களையும் அடக்க பிரயத்தனம் எடுக்க வேண்டும், மந்திரித்த கடுகை பேய் பிடித்தவன் மீது அள்ளி வீசினால் பேய் அகன்று விடும்,

ஆனால் பேய் கடுகுக்குள்யே புகுந்து விட்டால் அந்தக் கடுகு எப்படிப் பேயை விரட்டும், அதேபோன்றுதான் பகவானை மனதால் தியானிக்க வேண்டும், தியானிக்க வேண்டிய மனதிலேயே காமகுரோதங்கள் நிறைந்து விட்டால் அதைக் கொண்டு எப்படி தியானிப்பது,படகைக்கொண்டு தான் ஆற்றைக் கடக்க வேண்டும், படகே பாம்பானால்அக்கரையுமில்லாமல். இக்கரையுமில்லாமல் நடு ஆற்றிலே நிற்கதியாகப்போகவேண்டியதுதான்.

மன மாசுக்களை அகற்றும் எண்ணம் ஞானத்தால் மட்டுமே உருவாகும், அந்த ஞானத்தைத் தருவது சூரியனாகும், சூரியன் என்பது வானத்தில் உள்ள வட்டப் பொட்டு அல்ல! உன் புருவங்களுக்கு மத்தியில்உள்ள மூளையின் வாசல் . ஓடுகின்ற மனத பிடித்து இழுத்து வந்து அந்த மையத்தில் கட்டு மனதிற்குள் மண்டிக் கிடக்கும் அஞ்ஞானக் குப்பைகள் பற்றி எரியும் அகங்கார கோபங்கள் வெந்து சாம்பலாகும்.

நன்றி 

http://keyemdharmalingam.blogspot.in

Thursday, February 6, 2014

தினம் ஒரு திருமந்திரம் 06-02-2014

எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண் ணாயிரம் வேண்டிலே.

பொருள் : எண்ணப்படுகின்ற ஆகர்ஷண முறையாவது ஏட்டில் உகாரத்தையிட்டு, எண்ணுதற்கு அருமையான வியாழக் கிழமைகளில் வெள்ளிப் பொடிப் பூசி, வெண்ணாவல் பலகையில் வைத்து மேற்கு நோக்கி பிரணவத் தியானம் எண்ணாயிரம் செய்க. (கருடணை - என்றும் பாடம். ஒப்பாம் நிலைமை - என்று பொருள்.)

Wednesday, February 5, 2014

அருள்மிகு ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில்


தலமும் இருப்பிடமும்:
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே தஞ்சை செல்லும் சாலையில் 2.கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தலப்பெயர்கள்:
அருள்மிகு ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்

தலவிருட்சம் : வில்வம்

மூர்த்திகள்:
இறைவன்:அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர்
இறைவி:மந்திர பீடேஷ்வரி அருள்மிகு மங்கள நாயகி

தீர்த்தங்கள் : மகாமகம், காவிரி,அரிசெல்லாறு

திருமுறை : ஸ்ரீசம்பந்தர், ஸ்ரீஅப்பர்
தலப்பெருமை:
பிரளய காலத்தில் இறைவன் அருளிய வண்ணம் பிரம்ம தேவர் அமுதத்தையும் மண்ணையும் சேர்த்துப் பிசைந்து மாயா மயமாகிய குடத்தைச் செய்து அதனுள் அமுதத்தையும், சிருஷ்டி பீஜத்தை வைத்து குடத்தின் மேல் மாவிலை வில்வம், தேங்காய் பூணூல் முதலியவைகளைச் சேர்த்து ஓர் உறியில் குடத்தை வைத்து மேருமலையில் ஓர் இடத்தில் சேர்க்க, பிரளய வெள்ளத்தில் அக்குடம் மிதந்து தென்திசை நோக்கி வந்தது. ஓர் இடத்தில் தங்கியது. குடத்தின் மேல் அணியிருந்த மாவிலை, தேங்காய், வில்வம், பூணூல் முதலியவை பிரளயத்தின் பெருங்காற்றால் சிதறுண்டு பல் வேறிடங்களில் விழுந்தன. அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி இலிங்கங்கான் ஏற்பட்டுப் பற்பல கோயில்களாக விளங்குகின்றன. மாவிலை வன்னி மரமாயிற்று. அப்போது சிவபெருமான் வேட வடிவங்கொண்டு அமுத கும்பம் தாங்கிய இடத்துக்கு வந்து தூரத்தில் இருந்தபடியே கும்பத்தின் மீது ஓர் அம்பை (பாணத்தை) எய்தார். பாணம் எய்த இடம் பாணபுரி என்னும் தலமாகும். அந்த அம்பு அமுத கும்பத்தின் மூக்கைச் சிதைத்தது. அதன் மூலம் அமுதம் நாலாபக்கங்களிலும் பரவியது. இக்காரணத்தால் இத்தலம் குடமுழுக்கு என்ற பெயரை அடைந்தது. பின்பு சிவபெருமான் கும்பத்தை அணுகி அமுதத்தால் நனைந்த வெண்மணலை வாரிக்கும்பத்தில் சேர்த்து இலிங்க வடிவமாகித் தாமும் அதனுள் புகுந்து மறைந்தார். இவ்விதம் கும்பத்தில் தோன்றியதால் கும்பேஸ்வரர் ஆனார்.
அருள் மிகு கும்பேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் சற்று புதுமையுடன் காணப்படுகிறார். பாணம் கீழே பருத்தும் முடி சற்று சிறுத்தும் சாய்ந்தி ருப்பதும் போல் தோன்றுகிறது. அமுத வெண்மணல் லிங்கமாதலால் தங்கக் கவசம் சார்த்தியே அபிஷேகம் செய்கிறார்கள் சந்நிதியின் அமைப்பு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
இக்கோயிலில் அடுத்து ஓர் மணங்கவர் சந்நிதி அம்பாளுடைய கோயிலாகும். அம்பாள் தம்மை அன்போடு தொழுவோர்க்குத் திவ்விய மங்கள்நாயகி என்னும் பெயரைப் பெற்றிருக்கிறார். மந்திர பீடத்தில் எழுந்தருளியிருந்து மங்கள பீடேசுவரியாக நின்று அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இக்கோயிலில் நவராத்திரி மண்டபத்தின் மேல் இடத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களுடன் பன்னிரண்டு இராசிகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்ப மாட்சி குறிப்பிடதக்கது. இதேபோல் சில தெய்வ மாட்சிகளையும் குறிப்பிடலாம்.
தலச்சிறப்பு:
இக்கோயிற் கருவறை சதுர வடிவுடையது. கருவறையில் உள்ள மூல லிங்கம் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது.இக்கோயில் காமிகாகம் முறைப்படி நித்தம் ஆறு காலப்பூசை நடைபெறுகிறது.
அர்த்த மண்டபம்:
கருவறை முன் உள்ள அர்த்த மண்டபம் தூண்கள் இன்றி எளிமையான அமைப்புடையது. தென் திசைகளிலும் வடதிசையிலுமாக இரு துவார பாலகர் சிலைகள் வாயிலைக் காத்து நிற்கின்றன. 123 செ.மீ. உயரமுடைய இவை பிற்காலச் சோழர் காலக் கலையை வெளிப்படுத்துகின்றன.
மகாமண்டபம்
அர்த்த மண்டபத்தின் முன்புறம் உள்ள மகாமண்டபம் நீள் சதுர வடிவில் காணப்படுகிறது. இம்மண்டபத்தை வரிசைக்கு மூன்று தூண்கள் வீதம் இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் தாங்கி நிற்கின்றன. இத்தூண்களின் மேல் இருதலைப் போதிகையும் முத்திலைப் போதிகையும் அலங்கரிக்கின்றன. போதிகையின் பக்கங்களிலும் மத்தளத்தின் இசைகேற்ப சதுர நாட்டியமாடும் பெண்களும் பாயும் சிம்மமும், சுற்றிலும் குழந்தைக்கு விளையாட்டு காட்டும் இரு பணிப்பெண்களுக்காகச் சில சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் பிந்திய சோழர் காலப் பாணியில் அமைக்கப்பட்டு உள்ளன. மகாமண்டபத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மேடை மீது ஆறு கால கணபதி என வழங்கப் பெறும் இடம்புரி விநாயகரின் நின்ற கோலச்சிற்பம் காணப்படுகிறது. இந்த உருவம் கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
சோமஸ்கந்தர் சந்நதி
மகாமண்டபத்தின் தென்புறம் சோமாஸ்கந்தருக்கொன்று தனிச் சந்நிதியும், அர்த்த முகமண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தர் சந்நதியில் அம்மை அப்பராகத் தோன்றும் சிவனும் உமையும் இருவருக்கும் நடுவே தாமரை மலரேந்தி நிற்கும் குகனும் அருகில் தனித்து நிற்கும் தனி அம்மனும் அழகிய செப்புச் சிலைகளாக அமைந்து வழிப்பாட்டில் உள்ளன. இச்செப்பு படிமங்கள் பிற்காலச் சோழர் காலத்தவை. சோமஸ்கந்தரின் படிமம் கி.பி 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இச்சந்நிதியில் முன்புறம் சிறிய அர்த்தமண்டபம் அதன் முன்புறம் சிறிய அர்த்தமண்டபம் அதன் முன்புறம் நான்கு தூண்களை கொண்ட முகமண்டப மேடையும் அலங்கரிக்கின்றன.
சுவாமி சந்நிதி முகமண்டபம்
முகமண்டபத்தின் முன்புறமுள்ள சதுர வடிவுடைய முகமண்டபத்தின் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ சபை விநாயகருக்கும் வடமேற்கு மூலையிலுள்ள ஸ்ரீ காசிவிசுவநாதருக்கும் தனியாக சிறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
God Adhi Kumbeswarar and Mangalambigai
ஆடல்வல்லாண் -சிவகாமி
இம்மண்டபத்தின் வடதிசையில் ஆடல்வல்லானுக்குத் தனிச்சபை உள்ளது.இங்குள்ள மேடைமீது ஆடல்வல்லானும்,அருகில் அன்னை சிவகாமியும் செப்பு வடிவில் தென்திசை நோக்கிக் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஆடல்வல்லானும் உருவம் கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. முந்திய சோழர் கலைக்குச் சிறந்த எடுத்து காட்டாகத் திகழ்வது. ஆடல் வல்லானின் கூத்தை அமைதியோடு கண்டு களிக்கும் சிவகாமியின் உருவம் இடப்புறத்தில் தாமரை இருக்கை மீது நின்ற கோலத்தில் காட்டப்பட்டுள்ளது. அன்னை தன் வலக்கை கடக முத்திரையிலும், இடக்கை தொங்கும் கரகமாகவுமிருக்க இடையை வலப்புறமாக ஒடித்துத் திரிபங்கியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றாள். இச்சந்நிதி தென்திசை நோக்கி அமைந்து உள்ளது. முற்காலச் சோழர் காலத்திய ஆடல்வல்லானுக்கு நாயக்கர் காலத்தில் முகமண்டபத்தின் எழுப்பித்துள்ளனர்.
மங்களாம்பிகை சந்நிதி
சுவாமி சந்நிதிக்கு வடபுறம் முதல் திருச்சுற்றில் இத்தலத்துக் காமகோட்ட நாச்சியாரயான ஸ்ரீ மங்களாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது.சிறு கருவறை அர்த்த மண்டபம் விமானம் சிகரம் முகமண்டபம் ஆகிய பகுதியுடன் கீழ்த்திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் நடுவே தாமரை பீடத்தின் மீது நான்கு கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்ற இவ்வம்மை மந்திர பீடேஸ்வரி மங்களாம்பிகை என்ற பெயர்களால் அழைக்கப்பெறுகிறார். திங்கள் தோறும் பெளர்ணமி நாளிலும்,புரட்டாசித் திங்களில் நவராத்திரிப் பெருவிழாவின் போதும் மாசி மகத்தின் போதும். ஆடி, தை வெள்ளிக் கிழமைகளிலும் அம்மைக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
முகமண்டபம்
முகமண்டபத்தின் முன்புறம் நந்தியும் பலிபீடமும் மேடை மீது அமைக்கப்பட்டு உள்ளன. முகமண்டபத்தை வரிசைக்கு 7 தூண்கள் வீதம் இரு வரிசைகளில்14 தூண்கள் அலங்கரிக்கின்றன.இவற்றில் 8 தூண்கள் துதி யாளிகள் பாயும் நிலையில் காட்டப்பட்டுள்ளன. சீற்றத்தோடு தோன்றும் யாளிகள் வாயிலிருந்து வளைந்து செல்லும் கொடிக் கருக்குகள் வேலைப்பாடு மிக்கவை. ஏனைய 6 தூண்கள் யாளி இன்றி வேறுபட்ட சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. அடுத்து உள்ள தூண்களில் ஒன்றில் யாளி மீது வலக்காலை ஊன்றி, கால்களில் பாதரட்சையணிந்து இரு கைகளுடன் ஒய்யிலாக நிற்கும் கொடிப்பெண்களின் உருவத்தைக் காணலாம். இப்பெண்ணின் எதிரே உள்ள மற்றொரு தூணில் இரு கைகளுடன் கூடிய எழில் வாந்த நங்கையின் தோற்றத்தைக் காணலாம்.
எழில் வாய்ந்த இச்சிற்ப தூண்கள் அனைத்தும் தஞ்சை நாயக்கர் காலத்தவை. ஒவ்வொன்றும் 3.5 மீட்டர் உயரமுடயவை. இத்தூண்கள் மீது குந்துசிம்மங்களும், பூமுறைகளும், கல்வளையங்களும் அலங்கரிக்கக் காண்கிறோம்.
முதல் திருச்சுற்று
முதல் திருச்சுற்றில் மகாமண்டபத்தின் வடதிசையில் சண்டி கேசுவரின் சிற்றாலயம் அமைந்துள்ளது.திருச்சுற்று மாளிகையின் கீழ்த்திசையில் 63 நாயன்மார்களுக்கும் தொகையாடியார் ஒன்பதிமருக்குமாக 72 செப்புச் சிலைகள் வார்த்து வைக்கப்பட்டுள்ளன.இவை அனைத்தும் பணிந்து நின்று வணங்கும் கோலத்தில் காணப்படுகிறது. இம்மண்டபம் அறுபத்து மூவர் மண்டபம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இம்மண்டபத்தில் அதிகார நந்தியின் செப்பு வடிவம் ஒன்றும், திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் வலஞ்சுழி விநாயகர் உருவம் நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காணப்படுகின்றன.இவ்வுருவம் பிற்காலச் சோழர் காலமான கி.பி.12, 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. வலஞ்சுழி விநாயகரை அடுத்து,பிட்சாடன மூர்த்தி சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, ஆறுமுகப்பெருமான் ஆகியோர் செப்புப் படிமங்களும் ஸ்ரீ ஜோதிலிங்கம் அட்சயலிங்கம் கோடிலிங்கம் ஆகிய இலிங்க வடிவங்களும் மகாலட்சுமி, சேட்டை ஆகியோர் சிலைகளும் உள்ளன.
பள்ளியறை
வடதிசையில் பள்ளியறையில் உள்ள கண்ணாடி பதிந்த வேலைப்பாடு கொண்ட மண்டபத்தில் ஊஞ்சலில் அம்மையின் திருமேணி உள்ளது. பக்கச் சுவர்களில் கற்பகத்தரு, காமதேனு இவற்றின் ஓவியங்களும், பார்வதி, சிவலிங்கம் ஆகியனவும் ஊஞ்சலில் அமர்ந்துள்ள சிவனுக்குத் தேவி பழம் ஊட்டும் காட்சியும் சிவனைத் தன் மடியில் கிடத்தியிருக்கும் கோலமும், சிவனும் உவமையும் தழுவி நிற்கும் காட்சியும் ஓவியமாக உள்ளன. இதன் முன்புள்ள கண்ணாடி மண்டபத்தில், எட்டுத் தேவியரின் உருவங்களும், நாட்டியமாடும் பெண்ணுருவமும், ஆறு கலைஞர்கள் தஞ்சாவூர் பெண் இசைக்கும் காட்சியும் சமயக்குரவர் பாட பெண்கள் நாட்டுயமாடும் காட்சியும் ஓவியமாக்கப்பட்டுள்ளன.விதானம், கண்ணடிகளாலும் வண்ணக் கற்களாலும் அணி செய்யப்பட்டுள்ளது. இராமருக்குத் தனிச் சன்னதியும், பைரவர், ஜீரகரேசுவர், யோகமூர்த்தி, கோவிந்த தீட்சதர், அவர் மனைவி ஆகியோர் சிலைகளும் உள்ளன. இக்கோயில் உற்சவ மண்டபம் ஒன்றும், அலங்கார மண்டபமொன்றும் உள்ளன.


Thursday, January 9, 2014

தினம் ஒரு திருமந்திரம் 09-01-2014

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

பொழிப்புரை :
கிழமைகள் ஏழனுள், `வெள்ளி, திங்கள், புதன்` என்னும் மூன்றில் இடநாடி வழியாகவும், `சனி, ஞாயிறு, செவ்வாய்` என்னும் மூன்றில் வலநாடி வழியாகவும்,வியாழனில் வளர் பிறையாயின் இடநாடி வழியாகவும், தேய் பிறையாயின் வல நாடி வழியாகவும் இயங்குதல் உடல் நலத்திற்கு ஏற்புடைய இயற்கைப் பிராண இயக்கமாகும்.

ஆஸ்த்மாவும் யோகமும்


ஆஸ்துமா எனப்படுவது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு நோய். நமது நுரையீரலில் உள்ள சுவாசக் குழாய்களில் ஏற்படும் தூண்டுதல்களுக்கு நமது உடல் அதிகமான பதில்வினை கொடுப்பதால் ஏற்படும் நோய் இது.

புகைப்பிடித்தல், மாசு படிந்த சூழ்நிலை ஆகியவையும் ஆஸ்துமா வரக் காரணமாக இருக்கிறது. பதற்றம், கவலை, மன அழுத்தம் போன்ற மனதளவில் ஏற்படும் உணர்ச்சிகள் ஆஸ்துமாவை அதிகபடுத்தும்.


ஆஸ்துமா பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஆரம்பிக்கிறது, வெகு சிலருக்கு நடுவயதில் ஆரம்பிக்கலாம். பரம்பரையில் இது யாருக்கேனும் இருந்தால், வரும் சந்ததியினரையும் பாதிக்கலாம். புகைப்பிடித்தல், மாசு படிந்த சூழ்நிலை ஆகியவையும் ஆஸ்துமா வரக் காரணமாக இருக்கிறது. பதற்றம், கவலை, மன அழுத்தம் போன்ற மனதளவில் ஏற்படும் உணர்ச்சிகள் ஆஸ்துமாவை அதிகபடுத்தும்.



தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால், நாளடைவில், நுரையீரல் விரிவடையும் தன்மையை இழந்து நுரையீரலில் பல்வேறு நோய்கள் வருவதற்குக் காரணமாகிவிடும்.

ஆஸ்துமா தாக்குதலின்போது சுவாசக் குழாய்கள் சுருங்குகின்றன. இதனால், உள்ளே மற்றும் வெளியே செல்லும் காற்று தடைபடுகிறது. இதனுடன் சேர்ந்து அதிகச் சளி சுரக்கிறது. இது மூச்சு விடுவதற்குச் சிரமமாகவும், இருமலாகவும், மூச்சிரைப்பாகவும் வெளிப்படும். பதட்டமும் பயமும் ஏற்படும்போது மூச்சு விடுவதின் சிரமம் மேலும் அதிகமாகும்.

ஆஸ்துமா தாக்குதலின்போது ஒவ்வொரு முறையும் உடலும் மனமும் சோர்ந்துவிடும். தகுந்த கவனிப்பும் சிகிச்சையும் கொடுக்காவிட்டால், அடுத்த தாக்குதல் சுலபமாக ஏற்படும். பலருக்கு முதல் தாக்குதல் மோசமான அனுபவமாக இருப்பதால், அடுத்த தாக்குதல் பற்றிய பயமும் பதட்டமுமே மேலும் தாக்குதல் வரக் காரணமாக அமைந்துவிடுகிறது.

சிகிச்சை முறைகள்:

ஆங்கில மருத்துவம்: சுவாசக் குழாய்களின் இறுக்கத்தைக் குறைக்கவும் அவற்றில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் பல்வேறு மருந்துகள் உள்ளன. இவை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சரியாக உட்கொள்ள வேண்டும். ஆஸ்துமாவுக்கான மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனையின்றி நிறுத்தக் கூடாது. இவை உங்கள் ஆஸ்துமாவை மேலும் மோசமடையச் செய்யலாம்.

சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்துகளும் ஆஸ்துமாவுக்கு உதவுவதாக அறியப்படுகிறது.

யோகா எப்படி உதவுகிறது?

பிராணாயாமப் பயிற்சிகள்
நுரையீரல்களுக்கு நன்கு பயிற்சியளித்து பலப்படுத்துகிறது.
சாதாரணமாகச் சுவாசிக்கும்போது, முழு நுரையீரலையும் நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால், பிராணாயாமப் பயிற்சிகள் செய்யும்போது நுரையீரல் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுவதால், நுரையீரல்களின் பல்வேறு பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் எளிதாகச் செல்கிறது.
நுரையீரல்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகமாகிறது.

ஆசனப் பயிற்சிகள்
இவற்றை மேற்கொள்வதன் மூலம் நம் உடல் பலமடைகிறது.
நம் உடல் தளர்வு நிலையை அடைகிறது.
சீரான சுவாசம் ஏற்படுகிறது.
தொடர்ந்த ஆஸ்துமா தாக்குதலினால் நெஞ்சுக்கூட்டில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைக்கிறது.

தியானம்
நமது உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஓய்வுநிலையைக் கொடுக்கிறது. இதனால் பயமும் பதட்டமும் குறைந்து எந்த வகையான மன அழுத்தம் தரும் சூழ்நிலையையும் எதிர்கொள்ள மனதையும் உடலையும் தயார் செய்கிறது. இதன் மூலம் ஆஸ்துமா தாக்குதலை நாம் பெருமளவில் தடுக்க முடியும்.
“அம்” (Aum) மந்திர உச்சாடணையின்போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் உடலையும் மனதையும் சமநிலையில் வைக்கிறது. இதனால் ஆஸ்துமாவின் பாதிப்பு குறைவதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. (இந்த உச்சாடணத்தை தகுந்த வழிகாட்டுதலுடன் கற்றுக்கொண்டு செய்ய வேண்டும்.)

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிராணாயாமம் ஒரு வரப் பிரசாதம். பிராணாயாமம் செய்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆஸ்துமாவிலிருந்து மட்டுமல்லாமல் வயிற்றுப் புண், இருதய நோய்கள் மற்றும் முதுகு வலியிலிருந்து குணமாகி இருக்கின்றனர்.

இன்றைக்கு மருத்துவர்கள், உடலில் ஏற்படும் நிகழ்வுகள் மனதைப் பாதிப்பதாகவும், மனதில் ஏற்படும் நிகழ்வுகள் உடலைப் பாதிப்பதாகவும் கூறுகின்றனர். இப்போது மக்களுக்கும் பெரிய அளவில் உடல் மற்றும் மனம் சார்ந்த (Psychosomatic disease) வியாதிகள் வருகின்றன. பதட்டம் ஒருவருக்கு வயிற்றில் புண்ணாகவும், மற்றொருவருக்கு நுரையீரலில் ஆஸ்துமாவாகவும் வெளிப்படுகிறது.

உடல் மற்றும் மனம் – இந்த இரண்டு பரிமாணங்கள் வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள் (Software) போல உள்ளன. software மற்றும் hardware நன்றாக இருந்தாலும் அதை நீங்கள் மின்சாரம் என்னும் ஒரு சக்தியில் இணைக்கும்போதுதான் அவை இயங்கும். அதைத்தான் நாம் பிராணமயகோசம் அல்லது சக்தி உடல் எனக் கூறுகிறோம்.

யோகாவின் பெரும்பான்மைப் பணியே இந்த பிராணமயகோசத்தை சமன் செய்து அதை முழுமையான அதிர்வு நிலையில் வைத்திருப்பதுதான். உங்களுடைய சக்தி உடல் குறிப்பிட்ட சமநிலையிலும் முழு அதிர்விலும் இருக்கும்போது, உடல் அளவிலும் மனதளவிலும் நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுடைய உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் உணவு வகைகளைப் பொறுத்தவரையில் வாழைப்பழம், பலாப்பழம், சமைத்த பீட்ரூட் ஆகியவை ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல. அவரைக்காய் ஆஸ்துமாவை மோசமடையச் செய்யும். குறிப்பாக, பால் மற்றும் தயிர் போன்றவை உடலில் சளி ஏற்படுத்தக்கூடியவை. பலருக்கு பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்தினாலே, ஆஸ்துமா போய்விடுகிறது. நீங்கள் பால் பொருட்கள் சாப்பிட்டுக்கொண்டும் அதே நேரத்தில் ஆஸ்துமா பற்றியும் குறைப்பட்டுக்கொண்டால் பயன் இல்லை!

நன்றி